சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இறப்புக்குள்ளாவது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.அந்த வகையில் கன்னட திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்து வந்தவர் மந்தீப் ராய்.
இவருக்கு சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக இவரை இவரத குடும்பத்தினர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அழைத்துச் சென்றதாகவும் தெரிகிறது.
மேலும் அங்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டதுடன், அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வந்தது. சுமார் 73 வயதான மந்தீப் ராய், மேற்கு வங்க மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் என்றாகினும் கூட, சுமார் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கன்னட திரையுலகில் ஆழமாக வேர் பதித்தவர்.
இந்த நிலையில் தான், நடிகர் மந்தீப் ராய் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1980 முதல் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து திரையுலகில் நீங்கா புகழ்பெற்ற நடிகர் மந்தீப் ராய் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!