• Sep 21 2024

ஈஸ்வரியின் நிலமையைப் பார்த்து பதறிய செல்வி- அதிர்ச்சியில் உறைந்த பாக்கியா மற்றும் ராமமூர்த்தி- இனியா போட்ட பிளான்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் எனன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

வீட்டில் எல்லோரும் இருந்து பேசிட்டு இருக்கின்றனர். இப்போது அமிர்தா, அம்மா காலேஜிற்கு போனது எல்லோருக்கும் ஓகே தானே பாட்டிக்கு தெரிஞ்சால் என்ன ஆகிடும் என்று தான் தெரில என்று சொல்ல ஜெனியும் எழிலும் பயப்பிடுகின்றனர். இதனால் எழில் நான் போய் அம்மா கிட்ட சொல்லி கூட்டிட்டு வருகின்றேன் என்று கிளம்புகின்றார்.


காலேஜிற்கு வந்த எழில் பாக்கியாவிடம் பாட்டி வீட்டிற்கு வந்திட்டாங்க, அதுவும் சாமியார் மாதிரி வந்திருக்கிறாங்க என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சியடைந்து நான் காலேஜிற்குப் போன விஷயம் தெரியுமா என்று கேட்க அதெல்லாம் தெரியாது வா வீட்டுக்குப் போகலாம் என கூட்டிட்டுபோகின்றார். பாக்கியாவைக் கண்டதும் ஈஸ்வரி கோபப்படுகின்றார்.

அப்போது ராமமூர்த்தி நீ தான் கோபப்பட மாட்ட என்று சொல்ல ஈஸ்வரி சமாதானம் ஆகின்றார். அத்தோடு பாக்கியா தான் காலேஜிற்கு போன விஷயத்தை சொல்லாமல் மறைத்து விட்டு ஈஸ்வரியிடம் ஆசீர்வாதம் வாங்குகின்றார். பின்னர் விடிந்ததும் ஜாக்கிங் போய்ட்டு வந்த செழியன் நடுவீட்டில் ஈஸ்வரி யோகா செய்வதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார்.


செழியன் போய் பாக்கியாவையும் ராம மூர்த்தியையும் காட்ட அவர்களும் அதிர்ச்சியடைகின்றனர். தொடர்ந்து ஈஸ்வரி யோகா செய்வதைப் பார்த்த செல்வி ஈஸ்வரிக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்து புலம்ப பாக்கியா உள்ளே கூட்டிட்டு போய் உண்மை எல்லாம் சொல்கின்றார்.  அப்போது இனியா அம்மா நீ காலேஜிற்கு வராத எல்லாரும் என்னை கிண்டலடிக்கிறாங்க என்று சொல்ல பாக்கியா யார் என்ன சொன்னாலும் காலேஜிற்கு வருவேன் என்கிறார். அப்போது இனியா பாட்டி கிட்ட சொன்னால் வரமாட்ட தானே என்று கேட்கின்றார். இதனால் பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement