சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் அப்பத்தாவின் பங்சனை சிறப்பாக நடத்த எல்லோரும் ஊருக்குப் போகின்றனராம். அங்கு ஜீவானந்தம் தன்னுடைய மனைவியைக் கொன்றது யார் என்ற விஷயமும் தெரிந்ததால் அவரும் பங்சனுக்கு வருவார் என்று கூறப்படுகின்றது.
மறுபுறம் கதிர்,ஜீவானந்தம் , கிள்ளி வளவன் எல்லோரும் சேர்ந்து பெரிய பிளான் ஏதோ போட்டிருக்கின்றார்களாம்.அதே போல அந்த பங்சனுக்கு குணசேகரனும் வரவுள்ளாராம்.இதனால் அங்கு ஏதும் பிரச்சினை நடக்கப்போகின்றதா, யாருடைய உயிரோ போகப்போகின்றது என்ற குழப்பத்தில் விசாலாட்சி இருக்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.
Listen News!