பாக்கியலட்சுமி சீரியலில் வில்லனாக நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளவர் கோபியாக நடித்து வரும் சதீஷ். நெகட்டிவ் கதாபாத்திரத்தில் இவர் கொடுக்கும் முகபாவனைகளும், உடல் மொழியும் ரசிகர்களுக்கு பல சமயம் சிரிப்பை ஏற்படுத்தும். இதனாலே இவருக்கு தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
கோபியை பிரிந்த பின்பு பாக்யா சமையல் ஆர்டர். கேட்டரிங் ஆர்டர் என கலக்கி வருகிறார். இந்தப்பக்கம் கோபி ராதிகா கொடுக்கும் டார்ச்சர் தாங்காமல் தவித்து வருகின்றார்.மேலும் இவர் அண்மையில் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் நடித்து வருகின்றார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது கோபியின் தற்போதைய நிலமை என்று டைனோசர் சிலையின் வாயில் கைவைத்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
மேலும் சீரியலில் அடுத்து ஏதோ டுவிஸ்ட் நடக்கப் போகின்றது என்றும் கோபி ஏதோ பெரிய விஷயத்தில் ஈடுபடப் போகின்றார் என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!