நடிகர்கள் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ.இப்படத்தின் படப்பிடிப்பானது 40 நாட்களாக காஷ்மீரில் இடம் பெற்று வருகின்றது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அதன்படி நடிகர் சஞ்சய் தத் இன்றைய தினம் லியோ படப்பிடிப்பில் இணைந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
இதனை அடுத்து தற்பொழுது லியோ சூட்டிங்கிற்காக காஷ்மீரில் இருக்கும் த்ரிஷா, தன்னுடைய ஜன்னலுக்கு பக்கத்தில் இருந்துக் கொண்டு குரங்குகளுக்கு பழங்கள் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.
இந்தப் புகைப்படத்தில் எந்தவிதமான பயமும் இல்லாமல் கேஷுவலான நடிகை த்ரிஷா குரங்குகளின் பக்கத்தில் அமர்ந்தவாறு உள்ளார். இந்தப் புகைப்படம் அதிகமான ரசிகர்களால் விரும்பப்பட்டு அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..
Listen News!