விஜய் டிவியில் இந்த ஆண்டு பல சீரியல்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.அந்த வகையில் இதில் ஆரம்பித்த சில நாட்களிலேயே ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட சீரியல் தான் செல்லம்மா.
கணவன் துணை இல்லாமல் தனது பெண்ணை சிறப்பாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு போராடும் பெண்ணின் வாழ்க்கையை எடுத்துக் காட்டுகின்றது. மேலும் தற்பொழுது நல்ல விடயத்துக்காக செய்த தவறு ஒன்றுக்காக செல்லம்மா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
செல்லம்மாவின் மகள் மலரையும் யாரோ கடத்தி விட்டார்கள் இதனால் சித்து என்ன செய்யப்போகின்றார். எப்போது செல்லம்மா ஜெயிலில் இருந்து விடுவிக்கப்படுவார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த சீரியலில் செல்லம்மா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் அஞ்சிதா பிரபல நிறுவனத்தின் விருது வழங்கு் விழாவிற்கு சென்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!