தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது விஜய் டிவி. இந்த சேனலானது 20 வருடங்களுக்கும் மேலாக தங்களின் வித்தியாசமான தொடர்கள் மூலமாகவும், விறுவிறுப்பான தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.
அவ்வாறான தொடர்களில் ஒன்று தான் 'செல்லம்மா'. மற்ற சீரியல்களைப் போலவே இந்த சீரியலும் விறுவிறுப்பாக நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் இந்த சீரியலின் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.
அதில் குலதெய்வம் கோயிலுக்கு சென்ற லக்ஷ்மியும் , கணவரும் சாமியாரிடம் "எங்க பொண்ணு கையால் பொங்கல் வைச்சு சாமிக்கு படைக்கணும், அதற்கான ஏற்பாட்டை பண்ணுங்க சாமி" எனக் கூறுகின்றனர். பின்னர் மேகாவை கண்டதும் லக்ஷ்மி "ஏங்க செல்லம்மா கையால் பொங்கல் வைத்தால் மேகாக்கு சந்தேகம் வந்திடும் இப்ப என்ன பண்ணுறது" எனக் கணவரிடம் கேட்கின்றார். அவரும் பதிலுக்கு அந்தக் கடவுள் தான் வழி காட்டணும் எனக் கூறுகின்றார்.
மறுபுறம் மகேஷைக் கண்ட மேகா அந்த இடத்தை விட்டுக் கிளம்புகின்றார். பின்னர் சந்நிதியை சுற்றி வந்து தான் கழுத்தில் அணிந்திருந்த மாலையை சூலாயிதத்தின் மேல் தூக்கிப் போடுகின்றார் செல்லம்மா. ஆனால் அந்த மாலை தவறுதலாக சித்தார்த் கழுத்தில் போய் விழுகின்றது. இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.
Listen News!