• Sep 20 2024

‘சென்னை வாசிகளுக்கு சொந்த வீடு ஒரு பெரிய கனவு’… எமோஷனலாக பேசிய எதிர்நீச்சல்’ சீரியல் குணசேகரன்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலில் ‘குணசேகரன்’ என்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மாரிமுத்து.இவர் ஒரு நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார்.

 

கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மேலும் ‘யுத்தம் செய்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வெள்ளித்திரையில் கொடிக்கட்டி பறந்த இவர் தற்பொழுது சின்ன திரையில் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் வில்லனாக மிரட்டி வருகிறார். தான் அறிமுகமான முதல் சீரியலிலேயே நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார்.

இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம்  ‘குணசேகரன்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்துவின் இயல்பான நடிப்பே என்று பலரும் கூறுகின்றனர்.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் மாரிமுத்து. இவர் சமீபத்தில் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் சென்னை வாசிகளுக்கு சொந்த வீடு என்பது மிகப் பெரிய கனவு என்றும், தான் தன் வாழ்க்கையில் தன்னுடைய சொந்த வீட்டை அடைய ஏற்பட்ட கஷ்டங்களை பற்றியும் எமோஷனலாக பேசியுள்ளார்.


Advertisement

Advertisement