விஜய் தொலைக்காட்சியில் TRPக்கு பஞ்சம் இல்லாமல் படு ஹிட் கொடுத்து வரும் தொடர் பாக்கியலட்சுமி. மராத்தி தொடரான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாக நிறைய மாற்றங்கள் நடந்து ஒளிபரப்பாகிறது.
தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏற்றவாரு அங்கங்கு கதையில் மாற்றம் இருக்கிறது. எனினும் தற்போது கதையில் கோபி தனது குடும்பம் மற்றும் ராதிகா என இருவரிடமும் மாறி மாறி திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறார்.
பாக்கியா அவர் சமையல் தொழில், படிக்கும் நண்பர்கள் என ஜாலியாக இருக்கிறார்.
எனினும் தற்போது அடுத்து கதைக்களத்தில் பாக்கியா பழனிச்சாமியுடன் நெருக்கமாக இருக்கிறார், இருவரும் காதலிக்கிறார்கள் என கோபி தனது அம்மாவிடம் கூறுகிறார். இதனை கேட்டதும் செழியன் மற்றும் எழில் இருவரும் கோபியை அடிக்க செல்கிறார்கள்.
மேலும் இந்த பரபரப்பான காட்சிகளுடன் தொடரின் இந்த வார கதைக்களம் முடிவுக்கு வருகிறது என சொல்லப்படுகின்றது.
Listen News!