• Sep 20 2024

நடிகை சமந்தாவுடனான பயணத்தை முடித்த சின்மயி- அதைப் பற்றி என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு நிறைய பாடகர்கள் வந்துவிட்டார்கள். சிலரது குரலை மக்களால் மறக்கவே முடியாது.அப்படிபட்ட பாடகர்களில் ஒருவர் தான் சின்மயி.

ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற “ஒரு தெய்வம் தந்த பூவே” என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். 




பின்பு எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார்.இவர் பாடிய எல்லா பாடல்களும் செம ஹிட், எத்தனை முறை இவரது பாடலை கேட்டாலும் சுகமாக இருக்கும். பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ள இவர் டப்பிங் கலைஞராகவும் இருக்கிறார்.



நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா என பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ள இவர் தெலுங்கிலும் இதே பணியை செய்கிறார். அத்தோடு தெலுங்கில் நடிகை சமந்தாவிற்கு தொடர்ந்து டப்பிங் பேசி வந்தவர் சின்மயி.



ஆனால் இனிமேல் சின்மயி சமந்தாவிற்கு பேசப்போவதில்லையாம் என தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து பாடகி சின்மயி, தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன். என் சிறந்த தோழி சமந்தா தனது கதாபாத்திரங்களுக்கு அவரே பேசி வருகிறார்.

மேலும் அவருக்கு பின்னணி பேசும் வாய்ப்பு எனக்கு கிடையாது, அவருடனான டப்பிங் பயணம் முடிந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement