சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை சித்ரா.இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பூந்தமல்லி அருகே உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு அவரது ஹேம்நாத் தான் காரணம் என சித்ராவின் பெற்றோரும், உறவினர்களும் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து ஹேம்நாத்தை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைந்து விசாரணை நடத்தினர். சில மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த ஹேம்நாத் அண்மையில் ஜாமினில் வெளியே வந்தார். இவர் வெளியில் வந்ததை அடுத்து சித்ராவின் தோழியான ரேகா ஹேமந்த் மீது பல குற்றங்களை சுமத்தி வருகின்றார்.
அத்தோடு ஹேம்நாத்தின் நண்பர் சையத் ஆகியோர் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஹேம்நாத்திற்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி பகீர் கிளப்பினர்.
இந்நிலையில் சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்துக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து வேண்டும் என ஹேம்நாத்தின் நண்பர் சையத் ரோஹித் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து சாட்சியம் அளித்ததால், தனக்கு ஹேம்நாத் கொலை மிரட்டல் விடுப்பதாக சையத் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- சேர்ந்து வேலை பார்த்தது செம்மையான அனுபவம் -தி கிரே மேன்’ படம் குறித்து கூலாக பதிலளித்த தனுஷ்
- கோப்ரா படத்தின் ரிலீஸ் திகதியில் ஏற்பட்ட சிக்கல்- படக்குழு போட்ட புதிய திட்டம்
- பாவம் ஐயா அந்த மனுஷன்- இப்படி கூட்டிக் குறைக்க சொல்லுறீங்களே- திடீரென உடல் எடையை அதிகரித்த சிம்பு
- ஹுரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஷிவாங்கி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!