94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் மாதம் நடந்தது.இந்த நிகழ்வை காமெடி நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் தலைமுடி குறித்து, கிறிஸ் ராக் கிண்டல் செய்தார்.
அதனால் அதிருப்தியடைந்த வில் ஸ்மித், நேராக மேடைக்குச் சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் பளார் என ஓங்கி அறைவிட்டார். ஆஸ்கர் விழாவில் கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம், பெரும் சர்ச்சையானது.
இது தொடர்பாக வில் ஸ்மித், எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். கிறிஸ் ராக்கிடம் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை என ரசிகர்களும் கேள்விகளை எழுப்பினர். இதனையடுத்து தனது யூ-டியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் வில் ஸ்மித். அதில், தான் கிறிஸ் ராக்கை தொடர்பு கொண்டு பேச முயன்றதாகவும், ஆனால் அவர் பேச ரெடியாக இல்லை என வில் ஸ்மித் கூறியிருந்தார்.
இந்த வீடியோவில் தொடர்ந்து பேசிய வில் ஸ்மித், "எனது செயல் எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல, இதற்காக கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கண்ணீர் மல்க பேசியிருந்தார். மேலும், கிறிஸ் ராக்குடன் எப்போது வேண்டுமானாலும் பேச தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். அத்தோடு கிறிஸ் ராக்கின் அம்மாவிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருந்தார் வில் ஸ்மித்.
வீடியோவின் இறுதியில் வில் ஸ்மித் 'ஐ லய் யூ பேபி' என கிறிஸ் ராக்கை பார்த்து கூறியிருந்தார், பதிலுக்கு கிறிஸ் ராக்கும் 'லய் யூ டூ பேபி' என பதில் சொல்லி, பஞ்சாயத்தை முடித்து வைக்க வேண்டும் எனவும், ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவந்தனர்.
ஆனால், வில் ஸ்மித்தின் மன்னிப்புக்கு கிறிஸ் ரியாக்ட் செய்துள்ளதைப் பார்த்தால், பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது எனத் தெரிகிறது.கிறிஸ் ராக்கை ஒரோயொரு முறை அறைந்த வில் ஸ்மித்தோ ஓராயிரம் முறை மன்னிப்புக் கேட்டுவிட்டார்.
ஆனால், அதையெல்லாம் சுத்தமாக கணக்கில் எடுத்துக்கொள்ளாத கிறிஸ் ராக், வில் ஸ்மித்தை கலாய்த்து வருகிறார். "எல்லோருமே தங்களது தவறுகளை நியாயம் செய்து வருவதாகவும், இது வேடிக்கையாக உள்ளதாகவும்" கூறியுள்ளார். மேலும், ஆஸ்கர் விழா முடிந்ததில் இருந்து தற்போது வரை, வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்ததை காமெடியாகவே கிறிஸ் ராக் கிண்டல் செய்துவருகிறார். இவரின் இந்த செயல் ரசிகர்களை கடும் கோபத்தில் தள்ளியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- கோபிக்கு விவாகரத்துக் கொடுக்க முடிவு செய்த பாக்யா- அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பத்தார்
- அடுத்த மாதத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அப்டேட் வெளியாகும்”- செல்வராகவன் கூறிய புதிய தகவல்
- விஜய்டிவியில் ஆரம்பிக்கப்படவுள்ள அண்டாக்கா கசம் என்னும் புதிய ஷோ- தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா?
- கண்ணாண கண்ணே சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகை- அடடே இவரா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!