அதிகமாக வருமான வரி செலுத்தியவர்களுக்கு சான்று வழங்கி பாராட்டியுள்ளது வருமான வரித்துறை. இவ்வாறு இருக்கையில் திரையுலகை சேர்ந்தவர்களில் அதிகம் வருமான வரி செலுத்தியவராக மீண்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறார் பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார்.
அத்தோடு கடந்த 5 ஆண்டுகளாக அக்ஷய் குமார் அதிகம் வருமான வரி செலுத்திய திரையுலக பிரபலம் ஆவார். அக்ஷய் தற்போது இங்கிலாந்தில் படப்பிடிப்பில் இருக்கிறார்.
இதனால் அவருக்கு பதிலாக அவரின் குழுவினர் வருமான வரித்துறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சான்றை பெற்றுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது. கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார் அக்ஷய். அத்தோடு ஏகப்பட்ட விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.
அதனால் அதிகம் வருமான வரி செலுத்திய திரையுலக பிரபலமாக அக்ஷய் குமார் அறிவிக்கப்பட்டதில் ஆச்சரியம் இல்லை.
அக்ஷய் குமார் நடிப்பில் அண்மையில் வெளியான சாம்ராட் ப்ரித்விராஜ் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அக்ஷய் நடிப்பில் ரக்ஷா பந்தன், ராம் சேது, செல்ஃபி ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளது.
அண்மையில் காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் சமந்தாவுடன் சேர்ந்து கலந்து கொண்டு சிறப்பித்தார் அக்ஷய் குமார். அவர் சமந்தாவை தூக்கி வந்ததை பார்த்த கரண் ஜோஹரோ, இந்தியாவின் நம்பர் ஒன் நடிகையை உங்களின் நம்பர் ஒன் தோள்களில் தூக்கி வந்திருக்கிறீர்கள் என்று கூறியிருந்தார்.
பிற செய்திகள்
- நயன்தாரா குறித்து சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்–கொந்தளிக்கும் ரசிகர்கள்..!
- இயக்குநர் ஷங்கர் பட பெயரில் நடந்த மோசடி…நடந்தது என்ன..?
- சீரியலில் மட்டும் தான் அடக்கம்-கவர்ச்சியில் அதகளம் காட்டும் ப்ரியங்கா குமார்..!
- பிள்ளை மீது சத்தியம் செய்து உண்மைகளை சொன்ன ராதிகா.. பாக்கியா எடுத்த முடிவு – இன்றைய எபிசோட்
- இனிமேல் படங்கள் இயக்கமாட்டேன் – பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!