• Sep 20 2024

கலர்ஸ் தமிழ் சேனலில் திடீரென முடிவுக்கு வரும் முக்கிய சீரியல் - அடடே இந்த சீரியல் இப்போ தானே ஆரம்பிச்சது

stella / 2 years ago

Advertisement

Listen News!


கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சொல்ல மறந்த கதை என்னும் சீரியலும் முடிவுக்கு வரவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சமீபகாலமாக புதிய சீரியல் ஆரம்பிக்கப்படுவதோடு ரிஆர்பி யில் பின்னுக்கு தள்ளப்பட்ட சீரியல்கள் முடிவுக்கு வருவதும் வழக்கமாகி வருகின்றது.

அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் சொல்ல மறந்த கதை. இந்த சீரியலில் கதாநாயகியாக ரச்சிதாவும் கதாநாயகனாக விஷ்ணுவும் நடித்து வருகின்றனர்.


தாயின் பாசத்தை மையமாக வைத்து ஓடிய இந்த சீரியல் தற்பொழுது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர் என்பதும் முக்கியமாகும்.

அத்தோடு இந்த சீரியல் ரி ஆர் பியில் பின்னுக்குத் தள்ளப்பட்ட காரணத்தினாலேயே இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement