• Sep 20 2024

ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய தளபதி விஜய்- அடுத்த ஷுட்டிங் எங்கு தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல அவமானங்களைச் சந்தித்து தனது கடின உழைப்பினால் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் வசூலில் அள்ளிக் குவித்து விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அந்த வகையில் தற்பொழுது பீஸ்ட் படத்தினைத் தொடர்ந்து தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளார். படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷ்யாம் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படம் குடும்ப கதையாக இருப்பதாக தகவல் வெளியானதால் நீண்ட நாட்கள் கழித்து விஜய்யின் மாறுபட்ட நடிப்பை இதில் காணலாம் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நடிகர் விஜய் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்துள்ளார். அடுத்த கட்ட படப்பிடிப்பு சிறிது இடைவேளைக்குப் பின், பெங்களூரில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement