சினிமாவில் கால் பதித்து குறுகிய காலத்திற்குள்ளேயே முன்னணி நடிகை என்ற பெயரைப் பெற்றவர் தான் இலியானா. இவர் அதிகளவில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார்.
இவரது தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்கிற புகைப்படக் கலைஞரை சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்யாமலேயே லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். இருப்பினும் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து கொண்டனர்.
அந்த நபருடனான காதல் தோல்வியால் மன அழுத்தம் ஏற்பட்டு, அதிலிருந்து மீள்வதற்காக அதிகளவில் மாத்திரைகள் எடுத்துக் கொண்டதால் இலியானாவின் உடல் எடை அதிகரித்து குண்டாக மாறினார். இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.
இந்நிலையில் இலியானா நீண்ட நாட்களாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருப்பதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. அந்தவகையில் இலியானாவை தமிழ் படத்தில் நடிக்க வைக்க கோலிவுட்டை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் அட்வான்ஸ் கொடுத்திருந்தாராம்.
ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ள இலியானா, அந்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்டும் அவரிடம் கொடுக்கவில்லையாம். இதனால் கடுப்பான அந்த தயாரிப்பாளர் உடனே இலியானா மீது தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் புகார் ஒன்றினை தெரிவித்தாராம்.
இந்தப் புகாரினால் தான் தற்போது இலியானா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எது எவ்வாறாயினும் இதுகுறித்து இலியானா தரப்பில் இருந்து இதுவரை எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!