தமிழ் சினிமாவில் 30 ஆண்டு காலம் தன் தனிச்சிந்தனையாலும், நடிப்பாலும் சமூக விழிப்புணர்வு வசனங்களாலும் சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக்.
இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.அத்தோடு டாக்டர் அப்துல் கலாமினைப் பின்பற்றும் இவர் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் மரம் நடுகைப் பணியை ஆற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக திடீரென இறப்புக்குள்ளானார். இவரது மரணம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் கடும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவர் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனிரூத் குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
அதில் அவர் அனிரூத் இசையில் அதிக ஈடுபாடு உள்ளவர் மட்டுமல்லாது மனிதாபிமானமுள்ள நல்ல மனிதன் என்றும் கூறியிருக்கிறார். அதாவது ஒருநாள் அனிரூத்தை பார்க்க விவேக் ஒருநாள் அவரது இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது செருப்பை மறந்து போய் விட்டு காரில் ஏற முயன்றுள்ளார்.
இருப்பினும் திடீரென செருப்பின் நினைவு வந்து அதனை எடுக்கச் செல்லும் போது அனிரூத் அந்த செருப்பை தனது கையினால் எடுத்துக் கொண்டு வந்து விவேக்கிடமே கொடுத்துள்ளாராம். இது குறித்து தான் அவர் அதில் பேசியதைக் காணலாம்.
Listen News!