சினிமாவில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக 90காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை மோகினிஇவர் பல முன்னணி நடிகருடன் போட்டி போட்டு நடித்தாலும் இவரது திருமண வாழ்க்கை அவளத்திற்கு இனிதாக அமையவில்லை.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய இவர் இப்போது அமெரிக்காவில் கிறிஸ்துவ மத போதகராக மாறிவிட்டாராம்.
1976 ஆம் ஆண்டு தமிழ் பிராமண குடும்பத்தில் மகாலட்சுமி என்ற பெயருடன் பிறந்தவர் சினிமாவில் மோகினியாக அறிமுகம் செய்யப்பட்டார்.
1991 ஆம் ஆண்டு டான்சர் படத்தில் அக்சய் குமாருடன் கதாநாயகியாக நடிப்பதற்கு பாலிவுட் சென்றார்.அத்தோடு தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்துள்ளார்.
மோகினி நடிப்பில் தமிழில் வெளியான புதிய மன்னர்கள், நாடோடி பாட்டுக்காரன் போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன. இதன் பிறகு பரத் என்பவரை மணந்துகொண்டு, அமெரிக்காவில் குடியேறினார்.
சினிமாவை விட்டு விலகியவர் தற்போது அமெரிக்காவில் கிறிஸ்துவ மத போதகராக மாறியுள்ளார்.இந்த தகவலை பேட்டியின் மூலம் மோகினி உறுதி செய்துள்ளார். அதுமட்டுமில்லை இவர் கணவருடன் விவாகரத்து வாங்கி விட்டார். மோகினிக்கு ருத்ரகேஷ் என்ற மகனும் உள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் பிராமண இந்துவில் பிறந்துவிட்டு எப்படி இவர் கிறஸ்தவ போதகராக மாறமுடியும் என கேட்டு வருகிறார்கள்.
Listen News!