தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை படித்திருந்தவர் தான் நடிகர் ரஜனிகாந்த்.
இவர் தற்போது தனது 169வது படமான ஜெயிலர் என்கிற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். நெல்சன் இயக்கவுள்ள இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்க உள்ளது.
மேலும் ஜெயிலர் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.150 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சூப்பர்ஸ்டார் விளங்குகிறார். இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் விருது ஒன்று வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி வருமான வரி தினமான இன்று, வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. மேலும் இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு விருது வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த விருதை வழங்கினார்.
அத்தோடு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததால், அவருக்கு பதில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா இந்த விருதினை பெற்றுக்கொண்டார். மேலும் இந்த விழாவில் பேசிய தமிழிசை, “பிரதமர் மோடியின் தொடர் முயற்சியால், பொதுமக்கள் முறையாக வரி செலுத்த முன்வந்துள்ளதாக தெரிவித்தார். அனைவரும் கண்டிப்பாக அரசுக்கு வரி செலுத்த வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர், வரி செலுத்தாவிட்டால் நாம் இருப்பதையும் இழந்துவிடுவோம் என கூறினார்.
பிற செய்திகள்
- குக்விக் கேமாளி புகழா இது…சூப்பர் ஸ்டார் போல் மாறியுள்ளார்..வைரல் புகைப்படம்..!
- சூர்யாவுக்கு தேசிய விருது கிடைச்சது இப்படித்தானா- புதுக் காரணத்தை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்
- என்னம்மா இது… லாஸ்லியாவிடம் பல கேள்விகளை கேட்டு வரும் ரசிகர்கள்…!
- திடீரென இணையத்தில் கசிந்த நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு..!
- இனிமேல் படங்கள் இயக்கமாட்டேன் – பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!