• Sep 20 2024

முதன் முதலாக தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட அண்ணா சீரியல் செந்தில்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் மிர்ச்சி செந்தில். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானார்.

இதனை அடுத்து மாப்பிள்ளை போன்ற தொடர்களில் நடித்து பிரபலம் ஆனார். மேலும் அவர் ஹீரோவாக படத்திலும் நடித்து இருக்கிறார்.தற்போது செந்தில் ஷு தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் அண்ணா என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.


சமீபத்தில் தொடங்கிய அந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.செந்தில் மற்றும் அவரது மனைவி ஸ்ரீஜாவுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் கழித்து தான் குழந்தை பிறந்தது. கடந்த ஜனவரி 4ம் தேதி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தற்போது மகனுக்கு 6 மாதங்கள் ஆகி இருக்கும் நிலையில் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை மிர்ச்சி செந்தில் வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement