சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி.இவர்கள் பல நாட்டுப்புற பாடல்களைப் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற செந்தில் டைட்டில் வின்னர் ஆகி வீட்டை பரிசாகப் பெற்றார்.
தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள்.இது தவிர உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள்.தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி இருந்தார்.இந்தப் பாடல் ரசிகர்களிடையே வேற லெவலில் ரீச் ஆனது
இவர்கள் இருவரும் அண்மையில் செம கோலாகலமாக தங்களது குழந்தைகளின் காதணி விழாவை நடத்தினார்கள். இந்த நிலையில் தற்போது அவர்கள் பிரம்மாண்டமாக ஒரு புதிய வீட்டையும் கட்டியுள்ளார்கள்.
அந்த வீட்டின் திறப்பு விழாவிற்கு தங்களது வாழ்க்கையில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்த சூப்பர் சிங்கர் இயக்குநர் ரூபா அவர்களை அழைத்து வீட்டின் திறப்பு விழாவை நடத்தியுள்ளனர்.இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!