• Sep 20 2024

விருது வென்ற பிக்பாஸ் அக்க்ஷரா... அதுவும் இப்படி ஒரு உடையிலா... குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரமாண்டமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5-ஆவது சீசன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். அவ்வாறான போட்டியாளர்களில் ஒருவரே அக்‌ஷரா. இவர் ஒரு நடிகையாக இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னரே மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். 


இந்நிகழ்ச்சியில் 80 நாட்கள் வரை வெற்றிகரமாக விளையாடிய அக்‌ஷரா பின்னர் மக்கள் அளித்த வாக்குகளில் குறைவான வாக்கு எண்ணிக்கை கிடைத்த காரணத்தால் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நாள் முதல் இன்றுவரை குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.



மாடல் அழகியான அக்‌ஷரா முன்னர் கூறியது போன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே ஒரு நடிகையாக இருந்திருக்கின்றார். அதாவது 2018-ஆம் ஆண்டு வெளியான 'காசு மேல காசு' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து கன்னடத்தில் வெளியான 'பில் கேட்ஸ்' என்ற படத்திலும் நடித்திருக்கின்றார். 


இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புக்கள் சரிவர கிடைக்காமையினால் விஜய் டீவியில் ஒளிபரப்பான 'வில்லா டூ வில்லேஜ்' என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் பின்னரே பிக்பாஸ் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அதுமட்டுமன்றி அவரின் ரசிகர் வட்டமும் பெரிதாகி உள்ளது.



இந்த நிலையில் இவருக்கு தற்போது ஒரு விருது கிடைத்திருக்கின்றது. அதாவது 'இந்தியன் மீடியா வேர்க்' என்ற அவார்ட் இவருக்கு கிடைத்திருக்கின்றது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். 


அதுமட்டுமல்லாது இப்பதிவில் "மக்களுடைய மனங்களை வெற்றி கொள்வது தான் என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய இலட்சியம். என் மேல வைச்சிருக்கின்ற நிபந்தனையற்ற இந்த அன்புக்கு என் ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகள்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது அவ்விருது வாங்கும் நிகழ்விற்கு நம்ம அக்‌ஷரா தேவதை போன்று ஒரு உடையணிந்து வந்திருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரை ஜொள்ளுவிடுவதோடு தமது வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement