சினிமாவில் அறிமுகமாகி கடந்த 20 வருடங்களாய் முன்னணியில் இருப்பவர் நடிகை த்ரிஷா. இன்று தன்னுடைய 40வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் சில காலம் நம்பர் 1 நடிகையாக இருந்தார்.
'லேசா லேசா' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும், த்ரிஷா நடித்து முதலில் வெளிவந்த படம் 'மௌனம் பேசியதே'. அதற்குப் பின்னர் பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தெலுங்கிலும் முக்கியமான முன்னணி கதாநாயகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தமிழில் விக்ரமுடன் நடித்த 'சாமி' படம்தான் அவருக்குப் பெரிய திருப்புமுனையைத் தந்தது. அதன்பின் விஜய்யுடன் நடித்த 'கில்லி' அவரை உச்சத்தில் கொண்டு போய் வைத்தது என்று தான் கூற வேண்டும்.தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். நாயகிக்கு முக்கியத்தும் வாய்ந்த 'அபியும் நானும்' படமும் அவருடைய நடிப்பைப் பற்றிப் பேச வைத்தது.
எனினும் தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார் த்ரிஷா. அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள 'ராங்கி' படம் வெளிவர வேண்டும். 'சதுரங்க வேட்டை, கர்ஜனை' உள்ளிட்ட படங்களும் வெளியாக வேண்டும்.
20 வருடங்களாக அனைத்து போட்டிகளையும் சமாளித்து திரையுலகில் வெற்றிநடை போடுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. 40 வயதைத் தொட்டாலும் இப்போதும் 20 வயதைப் போலவே இருக்கிறார் த்ரிஷா.இந்நிலையில் இன்று பலரும் இவருக்கு வாழ்த்து கூறி வருகின்றார்கள்.
பிறசெய்திகள்:
- பிரபல நிகழ்ச்சியில் நடிகர், தொகுப்பாளினி இடையே வெடித்த சண்டை-வைரல் வீடியோ..!
- பிரபல டிவி நடிகரை காதலிக்கும் ஏமி ஜாக்சன்? விரைவில் திருமணமா..!
- காதலியை ரகசியமாக பதிவு திருமணம் செய்த லோகேஷ் கனகராஜ்? கசிந்த வீடியோ..!
- காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகை தானாம்-விக்னேஷ் சிவன்
- “நானே வருவேன்” திரைப்படத்தில் இத்தனை பாடல்கள் இருக்கின்றதா?- முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!