தனது வீட்டில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மேரி என்பவரது திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் விக்ரம்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் விக்ரம். வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தெரிந்தெடுத்து நடித்து வருவதில் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். நடிப்பைத் தவிர தமிழ் தெலுங்கு மஹிந்தி ஆகிய மொழிப் படங்களுக்கு டப்பிங் பேசியும் வருகின்றார்.
மேலம் இவர் நடிப்பில் இறுதியாக கோப்ரா என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. மிகுந்த எதிர்பர்ப்பின் மத்தியில் உருவாகிய இப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களையே பெற்றது. இதனை அடுத்து பொன்னியின் செல்வன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படம் செம்டெம்பர் மாதம் 30ம் திகதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.இந்நிலையில் சீயான் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார்.
இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக் & வர்ஷினியின் திருமணத்தில்விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
இதன் போது விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தனது வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில், விக்ரம் கலந்துகொண்டுசிறப்பித்தது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!