• Sep 20 2024

குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் திடீர் டுவிஸ்ட்... பெறுமதிமிக்க பரிசில்களை தட்டிச் சென்ற போட்டியாளர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் 'குக் வித் கோமாளி'. இது ஒரு சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் காமெடிக்கும், சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. அந்தவகையில் எலிமினேஷன் சுற்றில் இருந்து ஷெரின் வெளியேற்றப்பட்டமையைத் தொடர்ந்து மைம் கோபி, விசித்ரா, சிருஷ்டி டாங்கே, சிவாங்கி, ஆண்ட்ரியன் ஆகிய 5 பேர் மட்டுமே எஞ்சி இருந்தனர்.


இந்த நேரத்தில் திடீர் டுவிஸ்ட் ஆக 2 வைல்டு கார்டு போட்டியாளர்களை களமிறக்கி நடுவர்கள் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அதாவது பிரபல கலை இயக்குநர் கிரண் மற்றும் புகழ்பெற்ற காமெடி ஜாம்பவான் நாகேஷின் பேரன் கஜேஷ் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.


இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மற்றுமோர் டுவிஸ்ட் ஒன்றை வைத்துவிட்டனர். அதாவது இந்த வாரம் இம்யூனிட்டி என கூறப்பட்ட நிலையில், புதிய போட்டியாளர்களின் என்ட்ரி காரணமாக இந்த வாரம் கொண்டாட்ட வாரமாக மாற்றி விட்டனர்.


இதனையடுத்து போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இந்த வாரம் நன்றாக சமைத்து நடுவர்களிடம் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் போட்டியாளருக்கும், கோமாளிக்கும் இரு ஸ்மார்ட் டிவி பரிசாக கொடுக்க முடிவு செய்தநார். 


இந்தப் பெறுமதிமிக்க பரிசினை யார் வெல்லப் போகின்றார்கள் என்பதை எதிர்பார்த்து பலரும் காத்திருந்த வேளையில், இந்த கொண்டாட்டம் சுற்றில் நன்றாக சமைத்து நடுவர்களிடம் இருந்து அதிக மதிப்பெண்களை பெற்று இரு ஸ்மார்ட் டிவியையும் விசித்திரா மற்றும் சுனிதா ஆகியோர் பெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement