• Sep 20 2024

சந்தானத்திற்கு வாய்ப்புக் கொடுக்க தடையாய் நின்ற கவுண்டமணி- சிம்பு செய்த சிறப்பான சம்பவம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் சந்தானம்.இந்த நிகழ்ச்சியின் மூலம்  யோகி பாபு, சுவாமிநாதன், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலரும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்திருந்தனர்.நடிகர் சந்தானம் இதனை அடுத்து தான் மன்மதன் திரைப்படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமாகினார்.

இந்த நிலையில் மன்மதன் படத்தில் சந்தானத்தை நடிக்க வைக்க கூடாது என கவுண்டமணி கூறியதாக பிரபலம் ஒருவர் கூறியுள்ளார். அதாவது 'மன்மதன்' படத்தில் சந்தானத்தை நடிக்க வைக்க சிம்பு முடிவு செய்ததற்கு, கவுண்டமணி அவரை திட்டியது மட்டுமின்றி "நாம எவ்ளோ கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுக்கிறோம். ஆனால் அதை இவனுங்க கிண்டல் பண்ணி வீடியோ போட்டுட்டு இருக்கானுங்க, அவனுகளுக்கு எதுக்கு சினிமா வாய்ப்பு கொடுக்க வேண்டும், என கேட்டுள்ளார்.


ஆனால் சிம்புக்கு சந்தானத்தை மிகவும் பிடிக்கும் என்ற ஒரே காரணத்தாலும், அவரின் திறமை மீது உள்ள நம்பிக்கையாலும் இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார். படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, கவுண்டமணியின் காமெடி காட்சிகளை விட சந்தானத்தின் காட்சிகள் அதிகம் கவனிக்கப்பட்டது.


குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற கவுண்டமணியின் சில காட்சிகளை கூட நீக்கிவிட்டு, சந்தானத்தின் காட்சிகள் நன்றாக இருப்பதால் அதிகம்  வைக்க சொல்லியுள்ளார் சிம்பு. இதனை சுவாமிநாதன் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றின் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement