• Sep 20 2024

நடிகர் சந்தானத்துக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு-நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா, என்ற நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் சந்தானம். தொடர்ந்து மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.

குறுகிய காலத்தில் விஜய், அஜீத், என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக ஜொலித்தார். இதையடுத்து நகைச்சுவை வேடங்களில் குறைத்துக் கொண்ட சந்தானம் தற்போது நடிகராகவும் நகைச்சுவையாளர் ஆகவும் கதாநாயகன் வேடத்தில் நடித்து வருகின்றார் இதையடுத்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர தமிழ் சினிமாவின் பிசியான ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

இந்நிலையில்,இவர் கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து குன்றத்தூர் அருகே கல்யாண மண்டபம் ஒன்றைக் கட்டுவதற்காக அந்நிறுவனத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரிடம் 3 கோடி பணத்தை முன்பணமாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட சண்முகசுந்தரம் மண்டபத்தை கட்டிக் கொடுக்காமல் இழுத்தடித்து உள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இதன் பின்னர் சந்தானம் கொடுத்த மூன்று கோடி ரூபாய் முன் பணத்தை முழுவதுமாக திருப்பி கொடுக்காமல் சில சில லட்சங்களை பாக்கி வைத்த சண்முகசுந்தரம் மீதி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.

இதையடுத்து சந்தானம் எனக்கு தரவேண்டிய பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது சண்முகசுந்தரம் சந்தானத்துக்கு ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து இருவரும் தாக்கி கொண்டனர். இதை அடுத்து சந்தானம் மீது காவல் நிலையத்தில் சண்முகசுந்தரம் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.

கட்டுமான ஒப்பந்தத்தாரை தாக்கிய வழக்கில் விசாரணை கோர்டில் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக வருகிற ஜூலை 15ஆம் தேதி நடிகர் சந்தானம் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement