• Sep 20 2024

ஹேம்நாத் தாக்கதல் செய்த மனு- சித்ரா தந்தைக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மேலும் இந்த வழக்கில் கைதான சித்ராவின் காதல் கணவர் ஹேம்நாத் 60 நாட்கள் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளி வந்தார்.

இவர் சித்ராவின் மரணத்தில் அரசியல் புள்ளிகள், பிரபலம், பணம் படைத்தவர்கள் என பலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை விசாரணைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக சித்ராவின் தந்தை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு தள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement