சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் சொகுசு கார்களுக்கு முறையான நுழைவு வரி செலுத்தவில்லை என ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் வழக்கு பெரிதும் பரபரப்பை கிளப்பியது.
இவர் கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்றைய தினம் தீர்ப்பு வழங்க போகிறது உயர்நீதிமன்றம்.பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
ஆனால் தமக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என நடிகர் விஜய் தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது. ஆனால், விஜய் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வணிக வரித்துறை கோரிக்கை வைத்திருந்தது.
இந்த வழக்கில் நடிகர் விஜய்க்கு சாதகமாக தீர்ப்பு வருமா? அல்லது மொத்த அபராதத்தையும் கட்ட சொல்வார்களா? என்று திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- ஊருக்கே வந்து சிவகாமி குடும்பத்துக்கு சாபம் விட்ட சாமியார்– இன்றைய எபிசோட் அப்டேட்
- பாக்யா போனதுக்கு பிறகு இனியா சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் கோபி -இன்றைய எபிசோட் அப்டேட்
- நடிகை நயன்தாரா பற்றி வெளியான சூப்பர் தகவல்…இவ்வளவு நாளும் தெரியாம போச்சே..!
- பிரபல இயக்குநரை அழைத்துக் கதை கேட்ட விஜய்? அடடே இவரா..படம் ஹிட்டுத்தான் போல
- நடிகர் பிரபுவின் மகள் தற்போது இப்படியொரு தொழில் செய்கின்றாரா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!