• Sep 21 2024

மீண்டும் விமர்சனமா?- சூர்யாவுக்கு பயந்து பேச்சை மாற்றிய நடிகர் சந்தானம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகினர் அனைவரும் தற்பொழுது நடிகர் சூர்யாவைக் கொண்டாடி வருவதோடு அவருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவிதத வருகின்றனர். அதற்கு காரணம் இவர் சமீபகாலமாக உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படத்தில் நடிப்பதே காரணமாகும்.

அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய சூரரைப் போற்று திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் 5 தேசிய விருதுகளைப் பெற்றது என்பதும் முக்கியமாகும்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த குலுகுலு படத்தின் நிகழ்வுக்கு வந்த நடிகர் சந்தானத்திடம் பத்திரிக்கையாளர்கள் இது சம்மந்தமாக கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அவர்களிடம் “இந்த படம் சம்மந்தமான கேள்விகள் இருந்தால் கேளுங்கள்” என சொல்லி மழுப்பிவிட்டாராம் சந்தானம்.

ஜெய்பீம் படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பிய போது சந்தானம் அந்த படம் பற்றி பேசியபோது “ஒரு சமூகத்தைத் தாழ்த்தி பேசி படம் எடுக்காதீர்கள்” என்று கூறியது சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இதனால் சூர்யாவுக்கும் சந்தானத்துக்கும் இடையே ஒரு சிறிய மோதல் நிலவுவதாக கூறப்படுவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement