• Sep 20 2024

அழுது புலம்பும் இனியா-மனம் மாறுவாரா கோபி- பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பு உச்சத்தில் செல்லும் சீரியல் தான் பாக்கிலட்சுமி தொடர்.தற்போது எல்லா உண்மைகளும் தெரிந்து அடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்….

கோபியின் அப்பா எழுத்து போன் போட்டு பாக்யாவை பத்திரமா பாத்துக்கோ அவள தனியா விட்டுடாத ஒரு நிமிஷத்துல மனசு எந்த மாதிரி வேணாலும் முடிவெடுக்குமென அறிவுரை கூறுகிறார். அவ ரொம்ப தெளிவா இருக்கா ஏதோ முடிவெடுத்தது தான் இவ்வளவு தெளிவா பேசி இருக்கா என கூறுகிறார்.

அதன் பின்னர் இந்த பக்கம் வீட்டில் இனியா தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க பிறகு ஜெனியிடம் அம்மா நாளைக்கு வந்து விடுவாங்களா? அம்மா இல்லாம நல்லாவே இல்லை. அவங்க டெய்லி ரூமுக்கு வரும்போது எனக்கு தனி ரூம் வேணும் அவங்கள திட்டி சண்டை போடுவேன்.

என் ஸ்கூலுக்கு வரக்கூடாதுன்னு சொல்லுவேன். அம்மா கூட எப்பையும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பேன். ஆனா அம்மா திரும்பத் திரும்ப வந்து பேசிக்கிட்டே இருப்பாங்க இப்போ அம்மா என் கூட இருந்தா போதும் அவங்க என்னை என்ன சொன்னாலும் பரவாயில்லை என அழுகின்றார். அம்மா வரவரைக்கும் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என இனியா அடம் பிடிக்கிறார்.

இதன் பிறகு கோபி எழுந்து வெளியே வந்து இனியா ரூமுக்குள் போகலாம் என பார்த்தால் இனியா அழுது கொண்டிருப்பதை பார்த்து அப்படியே வந்து விடுகிறார். பிறகு செழியன் ரூமுக்கு சென்று பார்த்தல் செழியன் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு கீழே இறங்கி அப்பா அம்மா ரூமுக்கு சென்று பார்க்க அவர்களும் தூங்காமல் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்து கோபி வருத்தப்படுகிறார்.

கோபி மேலே வந்து படுத்த பிறகு செழியன் உள்ளே வந்து ஏசி போட்டுவிட்டு செல்கிறார். இதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து ஈஸ்வரி வந்து போர்வையை போர்த்தி விட்டு செல்கிறார். இதையெல்லாம் பார்த்த கோபி கண்கலங்கி அழுகிறார். தன் மீது குடும்பத்தார் வைத்திருக்கும் அன்பை நினைத்து கோபி மனம் மாறுவாரா? என எதிர்பார்க்க வைக்கிறது..

அத்தோடு மறுநாள் காலையில் எழில் வீட்டுக்கு வர எல்லோரும் பாக்கியம் பற்றி விசாரிக்க ஏதோ இருக்காங்க என கூறுகிறார். அம்மா என்ன முடிவு எடுத்தாலும் அவங்க கூட நாம எல்லாரும் நிக்கணும் என எழில் சொல்ல அப்படி என்ன முடிவு எடுக்கப் போறா? என்னைக்கா இருந்தாலும் அவை இந்த வீட்டுக்கு வந்து தான் ஆகணும். அத்தோடு கோபி தான் அவளோட புருஷன் அதை என்னைக்கும் மாத்த முடியாது தானே என பேசுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement