• Sep 21 2024

‘திடீர் நெஞ்சு வலி, ரத்த கசிவு’-டி. ராஜேந்தர் நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட சிம்பு!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர்,இயக்குநர் ,பாடகர். இசைக்கலைஞர் என பன்முக திறமை கொண்டு கலக்கி வருபவர் டி. ராஜேந்தர் .

நேற்று மாலை இவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த தகவல் ரசிகர்களிடத்தே பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டிருந்தது.இந்நிலையில், அதனை உறுதி செய்து நடிகர் சிம்பு தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் இதில் தனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் உயர் சிகிச்சைகாகவும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அவர் தற்போது ,முழு சுயநினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார் என்றும் அறிக்கையில் கூறியுள்ளார் சிம்பு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement