• Sep 20 2024

சிகிச்சை முடிந்து சென்னை வந்த டி.ராஜேந்தர்- சிம்பு திருமணம் குறித்து பேட்டி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் வலம் வருபவர் தான் டி .ராஜேந்தர்.இவர் இலட்சிய திமுக கட்சியின் தலைவராகவும் இருக்கின்றார்.தற்பொழுதும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முதல் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஜூன் 14 அன்று அமெரிக்காவுக்குச் சென்றார்.

அங்கு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து, குடும்பத்தினருடன் இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார்.

இவ்வாறுஇருக்கையில் அவர் விமான நிலையத்தில் பேட்டி கொடுத்துள்ளார், அப்போது சிம்பு திருமணம் குறித்து பேசியுள்ளார்.

சிம்புவின் நல்ல மனதிற்கு நல்ல பெண் கிடைப்பார், திருமணம் எல்லாம் கடவுள் நினைக்க வேண்டும் என அவரது ஸ்டைலில் பேசியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement