• Sep 20 2024

பிரசவ வலி வந்தது போல நடிக்க மறுத்த தனம்- ஜீவாவிடம் சண்டை போட்டு கத்திய மீனா- முல்லை எடுத்த முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தனம் கிச்சனில் எல்லாவேலையும் முடித்து விட்டு ரூம் கிளீன் பண்ணனும் என்று சொல்ல முல்லை அதெல்லாம் வேணாம் அக்கா நானே பண்ணிக்கிறேன். நீங்க உள்ள வந்து ரெஸ்ட் எடுங்க என்று சொல்கின்றார்.அப்போது அந்த நேரம் ஐஸ்வர்யா வந்து நீங்க ரெண்டு பேரும் என ரகசியம் பேசிட்டு இருக்கிறீங்க என்று கேட்க முல்லை இந்த வீட்டை உடைச்சு கட்டுறதை பற்றி பேசிட்டு இருக்கிறாம் என்று சமாளிக்கின்றார்.


தொடர்ந்து ரூமுக்குள் மீனா தனியாக நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த ஜீவா அதிர்ச்சியடைகின்றார். அப்போது மீனா நான் எதுக்காக இவ்வளவு பெரிய பாக்ல ரெஸ் எடுத்து வைச்சிட்டு இருக்கிறேன் என்று தனக்கு தானே கேட்க ஜீவாவும் அது தெரியாமல் தான் நானும் உன் கிட்ட கேட்டிட்டு இருக்கிறேன் என்று சொல்கின்றார்.

அப்போது மீனா எதுக்காக ஒரே சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிற, அக்காவுக்கு பிரசவ வலி வரும் மட்டும் இப்படித் தான் இருப்பேன் சந்தேகப்படுறியா எப்ப பார்த்தாலும் என்னுடன் சந்தேகம் தான் என்று சொல்லி திட்ட ஜீவா அங்கிருந்து கிளம்பிச் செல்கின்றார். பின்னர் விடிந்ததும் தனத்தின் அண்ணி வீட்டுக்கு வருகின்றார்.

இதனால் எல்லோரும் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் முல்லை தனத்திடம் வலி வந்த மாதிரி நடியுங்க என்று சொல்ல தனம் முடியாது என்று சொல்கின்றார்.மறுபுறும்  ஜீவா சூப்பர் மார்க்கெட்டிற்கு கிளம்ப மீனா ஒரு ஆத்திர அவசரம் என்றால் உன்னை எங்க என்று நான் தேடுறது நீ ஒரு இடமும் போக வேணாம் நான் உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் என்று மறித்து வைக்கின்றார்.


பின்னர் முல்லையிடம் போன் பண்ணி அக்கா நடிச்சாங்களா என்று கேட்க அக்கா எதுவும் பண்ணல என்று சொல்ல மீனா நீங்க ஏதாவது பண்ணுங்க என்று சொல்ல முல்லை உள்ளே சென்று தனத்திற்கு வலி வந்த மாதிரி நடிக்க எல்லோரும் சேர்ந்து ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போகின்றனர்.ஹாஸ்பிட்டலில் எல்லோரும் பதறிப்போய் இருக்க தனம் நடிக்க முடியாமல் கவலைப்படுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement