நடனப் புயல் என்று அழைக்கப்படும் பிரபுதேவா சில காலம் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் தற்பொழுது ரி என்ட் ரி கொடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் யங் மங் சங், பகீரா, ஊமை விழிகள், முசாசி, ஃப்ளாஷ் பேக், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை, ரேக்ளா என பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
இதில் முக்கிய திரைப்படமான மை டியர் பூதம் விரைவில் ரிஸுஷாகக் காத்திருக்கின்றது. அதற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் பிரபுதேவா பூதமாகவும், மாஸ்டர் அஷ்வந்த் எஜமானவராகவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒன்றாக பேட்டிகளில் பங்கெடுத்தும் வருகின்றனர்.
மேலும் பிரபுதேவாவிற்கு இந்தப் படத்தில் நடனம் ஆட முடியவில்லையாம். காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக வீட்டிலேயே இருந்து டச் விட்டுப் போனதாகவும், ஆடுவதற்கு சிரமமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி இவர் நடிக்கிறார் என்று தெரிந்ததும், இசையமைப்பாளர் இமான், மாஸ்டர் பாடலை கடினமாக கம்போஸ் செய்துவிட்டதாகவும், அதனை மேட்ச் செய்து ஆடியுள்ளேன் எனவும் பிரபுதேவா கூறியுள்ளார்.
இவ்வளவு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரபு தேவா அடுத்த ஆண்டு மீண்டும் படங்களை இயக்கப் போகிறாராம். அதற்கான பேச்சு வார்த்தைகள் போய் கொண்டிருப்பதாக சொல்லியிருக்கிறார். மை டியர் பூதம் திரைப்படத்தின் இயக்குநர் ராகவன், இதற்கு முன்னர் இயக்கியிருந்த மஞ்ச பை திரைப்படம் போலவே இந்தப் படத்திலும் நகைச்சுவை கலந்த செண்டிமெண்ட் காட்சிகள் இருக்கும் என மாஸ்டர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- கமெர்ஷியல் ரசிகர்களுக்கு மாஸ் விருந்தாக அமைந்துள்ள யானை திரைப்படத்தின் திரைவிமர்சனம்
- படம் சூப்பராக இருக்கின்றது நேருக்கு நேர் பாராட்டைத் தெரிவித்த பிரபல நடிகர்-மனம் நெகிழ்ந்த மாதவன்
- விபத்தில் சிக்கிய கோபி- வைத்திய சாலைக்கு ஒன்றாக ஓடி வந்த பாக்யா மற்றும் ராதிகா- பரபரப்பான புரோமோ
- விரைவில் வெளியாகும் வின்னர் 2- அப்போ வடிவேலுவும் வருவரா? -செம சந்தோஷத்தில் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!