நடிகர் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது டிமான்டி காலனி. ஒரே அறையில் இந்தப் படத்தின் அதிகமான சூட்டிங் நடத்தப்பட்டிருந்தது. ஆனாலும் ரசிகர்களை சீட்டின் நுனியில் இந்தப் படம் அமரவைத்தது. பேய்களை வைத்து காமெடி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறப்பான த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார் அஜய் ஞானமுத்து. இந்தப் படத்திலும் அருள்நிதியே லீட் கேரக்டரில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில், சரியான திட்டமிடலுடன் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.
கடந்த நவம்பரில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் செப்டம்பர் மாதத்தில் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் படத்தில் நாயகியே இல்லாத நிலையில், தற்போது இரண்டாவது பாகத்தில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், தறபோது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளும் சிறப்பான வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இருள் ஆளப்போகிறது என்ற வாசகத்துடன் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாகவும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!