தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் ஷுதமிழல் ஹிட்டாக ஓடி முடிவடைந்த சீரியல் தான் நீ தானே எந்தன் பொன் வசந்தம்.
இந்த சீரியலில் கதாநாயகனாக நடிகர் ஜெய் ஆகாஷ் நடித்திருந்தார். இதில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் தர்ஷனா அசோகன். இந்த சீரியலில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
இதனை அடுத்து தற்பொழுது ஷுதமிழல் ஒளிபரப்பாகும் கனா என்னம் சீரியலில் நடித்து வருகின்றார். இந்த சீரியலும் இவருக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தர்ஷனா அபிஷேக் என்பவரைக் காதலித்து வருகின்றார்.எனவே அவரின் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய வருங்காலக் கணவரை அறிமுகம் செய்துள்ளார். இதனால் இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!