• Sep 20 2024

பாரதி கண்ணம்மா வளர்ச்சிக்காக... படுத்துக் கிடந்த தீபா... அவரே கூறிய தகவல்... விழுந்து விழுந்து சிரித்த அரங்கம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் நீண்டகாலமாக  ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் பாரதி கண்ணம்மா. அதாவது மலையாள தொடரான கருத்தம்மா என்ற தொடரின் ரீமேக்காக பிரவீன் பென்னட் இயக்கிய இந்த தொடர்  ஹிட்டாக ஒளிபரப்பாகி முடிவடைந்தது.


இந்த சீரியலின் மூலம் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் 2ஆவது பாகத்தையும் ஆரம்பித்து ஒளிபரப்பாக்கி வந்தனர். முதல் பாகத்தை போல இல்லாவிட்டாலும்  'பாரதி கண்ணம்மா 2' சீரியலும் ரொம்பவே விறுவிறுப்பாக சென்று சமீபத்தில் முடிவுக்கு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த சீரியலினுடைய வெற்றி விழாவினை சீரியல் குழுமத்தினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் பாரதி கண்ணம்மா-2 சீரியலில் கண்ணம்மாவின் அம்மாவாக நடித்த விஜய் டிவி பிரபலமான தீபா அவர்கள் சூப்பராக தனது அனுபவத்தை பேசியிருக்கின்றார்.


அந்தவகையில் அவர் "பாரதி கண்ணம்மா வளர்ச்சிக்காக நான் படுத்தே கிடந்தேன், பல வருடங்களாக படுத்து ஒரு நாள் நான் தூங்கிட்டேன், ஒருநாள் எழுப்புறாங்க எம்மா எல்லாரும் எழுந்து வீட்டுக்கு போய்ட்டாங்க, நீங்க போகலையா என்று, என்னடா சூட்டிங் முடிஞ்சிடிச்சா என்று சொல்றதுக்குள்ள சீரியலையே முடிச்சிற்றாங்க" என மிகவும் நகைச்சுவையாக பேசியுள்ளார்.

தீபாவின் பேச்சைக் கேட்டு அரங்கமே விழுந்து விழுந்து சிரிக்கின்றது.

இதோ அந்த வீடியோ..!   


Advertisement

Advertisement