சீரியலாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி ஒன்றாக நடிப்பவர்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிய விஷயம் இல்ல. அந்த வகையில் இப்போது புது ஜோடியாக இடம் பிடித்தவர்கள் தான் கனா காணும் காலங்கள் சீரியல் தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு இவர்களுக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்திருந்தது.
நாங்கள் ஒன்றாக நடித்திருந்தாலும் காதலிக்கவில்லை என்றும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் வீட்டில் திடீரென்று மாப்பிள்ளை பார்க்கும்போது இருவரும் பேசி பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்து இருக்கிறோம் என்றும் தீபிகா கூறி இருந்தார்.
திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்று வந்து இந்த தம்பதி மீண்டும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில் தீபிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நிச்சயதார்த்த கோர்வைப் புகைப்படங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!