• Sep 20 2024

டேய் அண்ணா என்று தான் அழைப்பாள்-அவள் இருந்திருக்கலாம்- மகளை நினைத்து மனமுருகிய விஜய்யின் அம்மா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ‘தளபதி’ என்கிற அடையாளத்துடன் வலம் வரும் முன்னணி ஹீரோ தான் விஜய். இவர் தற்பொழுது வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திலிருந்து புகைப்படங்கள் வெளியாவதால் படக்குழு கடும் சோகத்தில் உள்ளது.

மேலும் இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குநராவார். அதே போல இவரது தாயார் ஷோபா சந்திரசேகர், பின்னணி பாடகியாக, நடிகர் விஜய்யுடன் இணைந்து பாடிய பாடல் உட்பட பல பாடல்களை பாடியுள்ளார். 


இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் மணவாழ்க்கை, திரை வாழ்க்கை பல விஷயங்களை பிரபல சேனல் ஒன்றின் பேட்டியில் பகிர்ந்துள்ளனர். அதில் அவரது அம்மா கூறியதாவது “என்னுடைய மகளைத்தான் இப்போது வரை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன். மூன்றரை வயதில் மறைந்த அந்த குழந்தை இருந்திருக்கலாம் என்று இப்போது வரை எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்று உருக்கமாக குறிப்பிட்டார்.

அப்போது பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், “எங்கள் எல்லோரிடமும் அந்த எண்ணம் இருக்கிறது.. நாங்கள் அனைவருமே மிஸ் பண்ணுகிறோம். விஜய்க்கு அந்த தாக்கம் இன்றுவரை இருந்து கொண்டே இருக்கிறது. எனக்கும் அந்த தாக்கம் இன்றும் இருந்துகொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் நினைக்கிறேனோ அப்போதெல்லாம் நான் அதை பற்றி ஃபீல் பண்ணுவது உண்டு. ஏன் என்றால் சில வீடுகளில் நாங்கள் பார்க்கும் பொழுது அப்பா மீது பாசமாக இருக்கும் மகள்களை காணமுடியும். 


அதையெல்லாம் காணும்போது எங்களுக்கு இந்த நினைவு வந்து போகும்” என்று குறிப்பிடுகிறார்.இதேபோல் ஷோபா சந்திரசேகர் குறிப்பிடும்போது, “அவள் பிறந்த பிறகுதான் நாங்கள் நிறைய முன்னேற்றங்களை கண்டோம்.. நான் கர்ப்பமாக இருக்கும் போதுதான் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கத்தொடங்கியது. அவள் பிறந்த பிறகுதான் அவரது திரைப்படம் வெளியானது. அப்போதுதான் காசையே பார்க்க ஆரம்பித்தோம். அவள் பெயர் வித்யா. விஜய்யை டேய் அண்ணா என்று தான் அழைப்பாள், இருவருக்கும் 6 வயதுதான் வித்தியாசம்.” என்று  உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.




Advertisement

Advertisement