• Sep 20 2024

டேய் ராஜா வெற்றி பிரபு, உங்களுக்கு மட்டும் லவ் பண்ண எங்கடா நேரம் இருந்துச்சு?- அதிர்ச்சியில் உறைந்த பிரபல சீரியல் நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!


கனா காணும் காலங்கள் தொடரின் புதிய சீசன் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகின்றது. பள்ளிப்பருவத்தை மையமாக வைத்து உருவான இந்த தொடரின் முதல் சீசன் வெற்றியடைந்ததை அடுத்து, தற்போது அதன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரண்டு சீசனிலும் நடித்த நடிகர், நடிகைகளும் இன்ஸ்டாகிராம் மூலம் படு பேமஸ் ஆகிவிட்டனர்.

அப்படி கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் பேமஸ் ஆனவர்கள் தான் தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு. இதில் தீபிகா அபி என்கிற கேரக்டரிலும், ராஜா வெற்றி பிரபு கெளதம் என்கிற கேரக்டரிலும் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் தான் தற்போது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.


 இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.இந்த நிலையில் கனாகானும் காலங்கள் சீரியலில் முதலில் ஆசிரியராக நடித்திருந்த சங்கீதா பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் இவங்க ரெண்டு பேருமே லவ் பண்ணுறாங்க என்ற விஷயம் யாருக்குமே தெரியாது.


கல்யாணப் பத்திரிகை தரும் போது தான் இருவருக்குள்ளும் காதல் இருக்கு என்று தெரிஞ்சிச்சு. இந்த விஷயம் அவங்களுக்கு ரொம்ப குளோஸ்ஸாக இருந்தவங்களுக்கே தெரியாது. ரொம்பவும் சீக்ரெட்டாத்தான் வச்சிருந்தாங்க. கேட்ட போது ரொம்பவே ஷாக்கிங்காகத் தான் இருந்திச்சு. ஷீட்டிங்கும் டே நைட் என்று நடந்திட்டு இருக்கும் இந்த டைம்ல இவங்களுக்கு எப்படி லவ் வந்திச்சு என்று தெரில என்றும் தெரிவித்துள்ளார்.




Advertisement

Advertisement