• Sep 20 2024

பிருத்விராஜின் திரைப்படத்தில் மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் வசனம் ..படக்குழு செய்த செயல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் பிருத்விராஜ்.இவர் தமிழில் ராவணன் நினைத்தாலே இனிக்கும் போன்ற இன்னும் பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.

இது தவிர மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் இவர் இது தவிர இரண்டு படங்களை இயக்கியும் உள்ளார்.மோகன்லால் நடிப்பில் உருவான லூசிபர் மற்றும் ப்ரோ டாடி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ப்ரித்விராஜ் நடித்து ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள படம் கடுவா. கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக போராடிய கடுவாகுன்னெல் குருவச்சன் என்பவரின் உண்மைக் கதையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடத்தே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை இழிவுப்படுத்தும் விதமாக கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து தற்போது படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்து இயக்குநர் ஷாஜி கைலாஷ் வருத்தம் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement