• Sep 21 2024

சொதப்பிய லாஸ்லியா ப்ளான் - சொந்த நாட்டிற்கே திரும்பி செல்லும் பரிதாப நிலை!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இலங்கையைச் சேர்ந்த பத்திரிகை வாசிப்பாளராக இருந்தவர் தான் லாஸ்லியா மரியநேசன்.இவர் விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட்ட ரியாலிட்ரி ஷோவான பிக்பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் நடிகர் கவினுடன் காதல் வயப்பட்டார். இதனால் அவரது அப்பா வந்து லாஸ்லியாவை திட்டியது எல்லாம் ரசிகர்களிடையே மிகவும் பேமஸ் எனலாம். இப்போது கவினுடனான கதாலை பிரேக் அப் செய்து விட்டு படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

அந்த வகையில் நடிகர் அர்ஜூனுடன் இணைந்து Friendship எனும் படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மீபத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றார். இதற்காக உடல் எடையை குறைத்து படங்களில் நடித்து வந்தார்.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. இதனால் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கும் லாஸ்லியா போட்ட பிளான் எல்லாம் சொதப்பியதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறாராம்.

அத்தோடு , இனி தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கவும் முடியாது என தெரிந்துகொண்டு சொந்த நாட்டிற்கே திரும்பி செல்லும் முடிவில் இருக்கிறாராம்.

லாஸ்லியாவை நினைத்து நெட்டிசன்கள் கலாய்த்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் புகழ் அடைந்தவர்கள் குறைவு தான் என சொல்லவேண்டும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement