"நாளைய தீர்ப்பு" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் தனது நடிப்புத் திறமையாலும், நடனத்தினாலும் பல கோடி மக்கள் மனங்களை கொள்ளை கொண்டிருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து "பகவதி, சச்சின், போக்கிரி, ப்ரண்ட்ஸ், காதலுக்கு மரியாதை, துப்பாக்கி, தலைவன்" போன்ற ஏராளமான படங்களில் நடித்து வந்த இவர் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் "வாரிசு" படத்தில் நடித்து வருகின்றார். மேலும் இப்படத்தினை ராஜீ தயாரிக்கின்றார்.
அதுமட்டுமல்லாது விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன்-22 இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. நடிகர் விஜய்யின் அமைதியான சுபாவத்தை ரசிகர்கள் மட்டுமன்றி சக நடிகர்களும் புகழ்ந்து வருவது வழக்கம்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான சங்கிலி முருகன் சமீபத்தில் ஊடகம் ஒன்றிலே விஜய் பற்றிய சில சுவாரசியமான விஷயங்களை தெரிவித்து இருக்கின்றார். மேலும் இவரே விஜய்யின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான "காதலுக்கு மரியாதை" என்ற படத்தையும் என்பதும் மிகவும் தோல்வியடைந்த படமாக்கிய "சுறா" படத்தினையும் தயாரித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் அவர் கூறும் போது, "விஜய்க்கு நடிப்புதான் மூச்சு, சினிமா மீது அவ்வளவிற்கு ஆர்வம் வைத்துள்ளார், ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர். ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது என்பது கடினம், ஆனால் விஜய் அதை சர்வ சாதாரணமாக செய்து முடிக்கக் கூடியவர், மேலும் விஜய்யின் நடனத்தை நம்மால் நினைத்து பார்க்க முடியாத ஒன்று, அசால்டாக வந்த நடனத்தை ஆடி முடிப்பார்" எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் "சினிமாவில் நான் பல வருடங்களாக இருக்கின்றேன், அதனால் எல்லா நடிகர்களையும் நான் பார்த்து விட்டேன், ஆனால் விஜய் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தற்போது வரை மாறவில்லை, அதாவது வசதி வாய்ப்பு, நல்ல படங்கள் என்று வந்தால் சில நடிகர்கள் மாறி விடுவார்கள், ஆனால் விஜய் அப்போது இருந்த போல தான் இப்போதும் இருந்து வருகின்றார், மேலும் விஜய் கரெக்ட்டான நேரத்திற்கு சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விடுவார், சினிமா மீது இவ்வளவு ஈடுபாடு உள்ளதனால் மட்டுமே விஜய் இந்த நிலைக்கு வந்துள்ளார்" எனவும் தெரிவித்திருக்கின்றார் தயாரிப்பாளர் சங்கிலி முருகன்.
பிற செய்திகள்
- “அடிப்படை அறிவு கூட இல்லையா"… கோவம் கொண்ட நடிகை குஷ்புவின் இளைய மகள்-இது தான் காரணமா..?
- விஜய் சேதுபதியின் மாமனிதன் படம் செய்த வசூல் விபரம்..!
- ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்த RK சுரேஷ்; இதுதான் காரணமா?
- மீண்டும் இணையும் ஆர்.ஆர்.ஆர். படக்குழு-ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் தகவல்..!
- குக்வித்கோமாளி பாலாவை இப்படி பார்த்திருக்கிறீர்களா..? யாரும் பார்த்திடாத புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!