தமிழ் சினிமாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தனது இசையால் வசியம் செய்த ஒருவர் என்றால் அது தேவா தான். அதாவது 'மாட்டுக்கார மன்னாரு' படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவநேசன் சொக்கலிங்கம்.
அறிமுகப்படத்திலேயே பலரிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றமையால் தொடர்ந்தும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த தேவா கானா மற்றும் மெலோடி இரண்டிலும் மற்ற இசைமைப்பாளர்களை விட கொடிகட்டி பறந்தார்.
இவரது சினிமாப் பயணத்தில் ஆரம்பத்தில் தேவா என்று அழைக்கப்பட்டு வந்த இவர், காலப்போக்கில் தனது இசையால் ரசிகர்கள் அனைவராலும் 'தேனிசை தென்றல் தேவா' என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் தேவாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் 20-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக இசைக் கச்சேரி நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். அதுமட்டுமல்லாது மீனா, மாளவிகா மற்றும் ஜெய் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த இசைக் கச்சேரியில் தேவா இசையில் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன பாடல்கள் அனைத்தும் பலராலும் பாடப்பட்டது. அத்தோடு தேவா நடத்தும் முதல் இசைக் கச்சேரி இது என்பதால், ஆயிரக்கணக்கான ரசிகர்களும் இந்த விழாவைக் காண குவிந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த விழாவில் பேசும்போது நடிகர் ரஜினிகாந்த் தேனிசைத் தென்றல் தேவா பற்றி ஆச்சர்ய தகவல் ஒன்றை வெளியிட்டார். அவர் கூறிய அந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
அந்தவகையில் அவர் கூறுகையில் சிங்கப்பூரின் 6-ஆவது அதிபராக இருந்தவர் எஸ்.ஆர்.நாதன். இவர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் ஆவார். இசையமைப்பாளர் தேவாவின் தீவிர ரசிகரான இவர், தான் இறக்கும் முன் தனது கடைசி ஆசை ஒன்றை கூறி உள்ளார்.
அது என்னவென்றால் தான் இறந்த பின்னர் தனது இறுதிச் சடங்கில் தேவா இசையில் சேரன் இயக்கிய பொற்காலம் படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ என்கிற பாடலை ஒலிக்கச் செய்யுமாறு கூறி இருந்தாராம்.
அவரது விருப்பத்திற்கு இணங்க அவரின் இறுதி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது இறுதிச் சடங்கில் அந்த பாடல் ஒலிபரப்பப்பட்டது. அந்த சமயத்தில் அந்த பாடலை சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள பல ஊடகங்கள் அப்பாடலை மொழிபெயர்த்து ஒலிபரப்பியதாகவும் கூறியிருந்தார்.
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் திரு.நாதன் அவர்கள், தான் இறப்பதற்கு முன், அவரது இறுதிசடங்கின் போது தேவாவின் இசையில் வெளிவந்த தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடலை play பண்ண சொல்லி இருக்கிறார். அதை சரியாக இந்த மேடையில் சொல்லி @ungaldevaoffl தேவா சாரை பாராட்டும் #Rajinikanth 👏 #DevaConcert pic.twitter.com/Fj1XzeAqIY
அதுமட்டுமல்லாது "தமிழ்நாட்டில் ஒரு ஊடகத்தில் கூட அந்த செய்தி வரவில்லை என ரஜினிகாந்த் வருத்தத்துடன் அந்த நிகழ்ச்சியில் கூறினார். இதையடுத்து சிங்கப்பூர் அதிபரின் அந்த இறுதிச்சடங்கில் தேவாவின் பாடல் ஒலித்தபோது எடுத்த வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.
உண்மை.. pic.twitter.com/riVaTaFogb
Listen News!