தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து தளபதி 68 படம் உருவாகவுள்ளது.
விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இதில் சஞ்சய் தனது தந்தையை போலவே திரையுலகில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். சமீபத்தில் கூட இர் இயக்கிய குறும் படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தற்போது ஹீரோவாக களமிறங்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது விஜய்யின் மகன் சஞ்சய்யை தனது மகளுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வைக்க தேவயானியின் கணவரும், பிரபல இயக்குநருமான ராஜகுமாரன் விரும்புவதாக தெரிவித்துள்ளார். அந்தவகையில் தேவயானி - ராஜகுமாரன் தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இவர்களில் மூத்த மகள் இனியா என்பவர் சமீபத்தில் தான் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர்ந்துள்ளார். இதனையடுத்து ராஜகுமாரன் 'நீ வருவாய் என' படத்தின் இரண்டாம் பாகம் கதையை தற்போது தயார் செய்திருக்கின்றார். இப்படத்தில் கதாநாயகனாக விஜய்யின் மகன் சஞ்சய்யையும், கதாநாயகியாக தனது மகள் இனியாவையும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Listen News!