பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு வாரா வாரம் ஒவ்வொரு விதமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்பொழுது நீதி மன்றம் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்யலாம். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, இந்த வாரத்துக்கான பிக்பாஸ் வீட்டு தலைவராக மைனா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
கால்பந்து போட்டியின் மூலம் தலைவர் தேர்ந்தெடுப்பு நடைபெற்றது. இதில் போட்டியிட்ட தனலட்சுமி இதுகுறித்து கோர்ட் டாஸ்க்கில் வழக்கு ஒன்றையும் தொடுத்திருந்தார். இது ஒருபக்கம் இருக்க, தனலட்சுமி - ஆயிஷா இடையேயான உரையாடல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிஷாவிடம் பேசும் தனலட்சுமி,"எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. இந்த வாரம் பொறுமையா இருந்துட்டு வெளியே போகணும்" என்கிறார். அப்போது ஆயிஷா, ஏன் எனக்கேட்க "எல்லாம் ஒவ்வொரு மாதிரி இருக்குங்க, ஒருத்தங்களை பத்தி தப்பா பேசுதுங்க. மறுபடியும் அவங்ககிட்டேயே போய் பேசிட்டு நம்மகிட்ட மூஞ்சியை காண்பிக்கிறாங்க" என்கிறார்.இதைத் தொடர்ந்து பேசிய ஆயிஷா,"நீ யார்கிட்டயும் ரொம்ப வச்சுக்காத, நீ எதுக்கு வந்தியோ அதுல மட்டும் கவனமா இரு" என அட்வைஸ் செய்கிறார்.
Listen News!