விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.
எல்லோரும் உள்ளே இருந்து பேசிட்டு இரக்கும் போது ஜீவாவும் கதிரும் மட்டும் வெளியில் நின்று பேசிட்டு இருக்கின்றனர். அப்போது மீனா வர ஜீவா நாம வீட்டுக்கு போகலாமா என்று கேட்க மீனாவும் சரி என்று சொல்லி விட்டு உள்ளே சென்று நான் வந்து ஒரு மாதம் ஆகிடுச்சு. கயல் தேடுவா நாம போய்ட்டு வாறோம் என்று சொல்ல எல்லாரும் அதிர்ச்சியடைகின்றனர்.
பின்னர் தனம் ஜீவாவிடம் சென்று கட்டாயம் இப்போ போய் ஆகனுமா என்று கேட்க ஜீவாவும் சமாளித்து விட்டு மீனாவைக் கூட்டிக் கொண்டு போகின்றார். ஜீவா போவதைப் பார்த்து கதிர் கவலைப்படுகின்றார். தொடர்ந்து இரவு எல்லோரும் துாங்கிட்டு இருக்கும் போது முல்லையின் குழந்தை அழ எல்லோரும் எழும்பி விடுகின்றனர்.
அந்த நேரம் தனம் தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறிவிட்டு வெளியே வந்து இருக்க மூர்த்தி பயந்து லைட்டை போட்டு பார்க்க தனம் முல்லையின் குழந்தை எழும்பி விட்டதாகவும் தனக்கு நெஞ்சுவலிப்பதாகவும் கூறுகின்றார். இதனால் பயந்து போன மூர்த்தி என்னாச்சு தனம் ஹாஸ்பிட்டல் போகலாமா என்று கேட்க தனம் சமாளித்து விட்டு துாங்கச் செல்கின்றார்.
பின்னர் விடிந்ததும் தனம் சமைததுக் கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யா வர சோறு மட்டும் சமைப்பியா நான் கொஞ்சம் வெளில போகனும் என்று சொல்ல ஐஸ்வர்யாவும் சரி என்று சொல்ல அந்த நேரம் முல்லையின் அம்மா வந்து ஐஸ்வர்யாவை உள்ளே முல்லை வரட்டாம் என்று கூட்டிக் கொண்டு போகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.
Listen News!