தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகர் தான் தனுஷ். இவர் நடிப்பில் தற்பொழுது நானே வருவேன் ,திருச்சிற்றம்பலம் ,வாத்தி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. அதில் நானே வருவேன் திரைப்படத்திலிருந்து லேட்டஸ்டான புகைப்படங்கள் சமீபகாலமாக வெளியாகிக் கொண்டு இருக்கின்றது.
தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி சினிமாவிலும் நடித்து வரும் இவர் பாடகராகவும் வலம் வருகின்றார். அந்த வகையில் இவர் மாரி 2 திரைப்படத்தில் பாடிய ரௌடி பேபி பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆனது.
இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இதையடுத்து இந்த வெற்றிக்கூட்டணி இப்போது மீண்டும் இணைந்துள்ளது. பிரபுதேவா இப்போது ஜல்சா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இடம்பெறும் துள்ளலிசை பாடல் ஒன்றை தனுஷ் பாடியுள்ளாராம். இந்த பாடல் படத்தின் ப்ளஸ் பாய்ண்ட்களில் ஒன்றாக அமையும் என தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!