• Sep 20 2024

விவாகரத்துக்குப் பின்னரும் ஒரே வீட்டுக்கு அடிக்கடி சென்று வரும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் தனுஷ். நடிப்பென்றால் என்ன என்றே தெரியாமல் சினிமாவில் கால் பதித்த இவர் தற்பொழுது நடிப்பின் ராட்சசன் என்று அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இருப் புதல்வர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர். இருப்பினும் இருவரும் கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்கள்.

விவாகரத்துக்கு பின் ஒரு பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியானது. அதன்படி, விவாகரத்து அறிவித்த பின்னர், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும், இதற்குமுன் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போகிறார்களாம்.

அதாவது தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு முன் ஆரியபுரத்தில் உள்ள ஃபிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளார்கள். அந்த வீட்டிற்கு தான், தற்போது இருவரும் அடிக்கடி சென்று வருவதாகவும், அந்த வீட்டின் வாசலில் இருக்கும் இருவரின் பெயர் கூட இன்னும் நீக்காமல் இருப்பதாகவும் பிரபல மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். விவாகரத்துப்பின் இருவரும் ஒரே வீட்டிற்கு சென்று வருவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement